Sunday, December 28, 2008

துரோகமல்ல..


My Photo
நமது வீட்டில் கொசுக்களின் உபத்திரவம் அதிகம் என்பதாக வைத்துக்கொள்வோம். கொசுக்கடிக்கு பயந்து  கொண்டு நாம் கொசுவலை போட்டுப் படுத்துக்கொண்டால் அது கொசுவுக்குத் துரோகம் செய்தது ஆகுமா? கொசுக்கள் எல்லாம் கூடிக்கொண்டு கொசுவாதம், கொசுத்துவேஷம் என்று சத்தம் போட ஆரம்பித்தால்   கொசுவுக்குப் பயந்துகொண்டு கொசு வலையை அறுத்தெரிந்து விட்டு கொசுக்கள் நமது ரத்தத்தை உறிஞ்சி நமக்கு வியாதியை உண்டாக்கும்படி நாம் தடிக் கட்டையர்களாக படுத்துக்கொள்ளுவதா? ஒருவர் 
தன் சொத்தை பாதுகாத்துக்கொள்ள நினைத்தால் அச்சொத்தைக் கொள்ளையடிக்க காத்திருப்பவனுக்கு கஷ்டமாகத்தான் தோன்றும். நமது வீட்டில் திருடலாம் என்று நினைத்திருப்பவனுக்கு நாம் கதவை தாழிட்டுக் கொண்டு  பத்திரமாய்ப் படுத்திருப்பது  துரோகமாய்க்கூட தோன்றலாம்.  ஒரு சமயம் இதனால் அத்திருடன்  குடும்பம் பட்டினி கிடக்கவும் நேரிடலாம். அதற்காக நம் பயந்து கொண்டோ, பரிதாபப் பட்டுக்கொண்டோ கதவை திறந்து போட்டு படுத்துக் கொள்ள வேண்டுமா? கொஞ காலத்திற்கு நாம் பந்தோபஸ்தாயிருந்தோமானால் திருடன் வந்து பார்த்துவிட்டு ஏமாற்றமடைந்து வீட்டுக்குப்போய் பட்டினி கிடப்பானானால் பிறகு தானாகவே இந்த தொழில் இனி நமக்கு பிரயோஜனப்படாது என்பதாகக் கருதி வேறுஏதாவது யோக்கியமான தொழிலில் ஈடுபட்டு யோக்கியமாக பிழைக்கக் கற்றுக்கொள்வான். ஆதலால் நாம் ஜாக்கிரதையாக இருப்பதன் மூலம் நமது சொத்து பதுகாக்கப் படுவதன் மூலம் திருடனும் யோக்கியனாவதற்கு மார்க்கம் ஏற்படுகிறது. ஆகையால் 
இம்மாதிரி சங்கங்கள் ஏற்படுத்துவதையோ நமது சுயமரியாதையையும் சமத்துவத்தையும் வேறு ஒருவனுக்கு பறிகொடுக்காமல் காப்பாற்ற முயலுவதினாலேயோ எந்த விதத்திலும் யாருக்கும் துரோகம் செய்தவர்களாக 
மாட்டோம். 

                                                    --தந்தைபெரியார்
                                                      [குடியரசு 6-2-1927]
நன்றி... பெரியார்தளம்

http://periyarthalam.blogspot.com

Monday, December 22, 2008

தி ரிட்டர்ன் ஆப் எமர்ஜென்சி - மணி / சீமான் கைது


தி ரிட்டர்ன் ஆப் எமர்ஜென்சி - மணி / சீமான் கைது.

இது ஒரு விசித்திரமான நாடு. உலகத்தின் மாபெரும் ஜனநாயக நாடாகத் தனக்குத் தானே பெயர் சூட்டி பெருமைகொள்ளும் நாடு. ஆனால் நம் நாட்டின் செயல்களுக்கும் , சனநாயகத்திற்கும் சம்பந்தமேயில்லாதது தான் வேதனையிலும் வேதனை


இங்கே தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்துடன் அரசாங்கம் அமர்ந்து பேசும். ஆனால் தடை செய்யப்பட்ட இயக்கங்களைப் பற்றி பேசுவதும் , அவற்றிற்கான தார்மீக ஆதரவையும் வழங்குவதற்காகவும் ஒரு சாராரை கைது செய்யும்.

பிரிவினைக் கோசம் எழுப்பி ஊர்வலம் போகும் காஷ்மீரத்து இளைஞர்களை கண்ணீர் புகைக் குண்டு வீசிக் கலைப்பதுடன் கண் மூடிக்கொள்ளும் இந்த அரசு. ஆனால் தடை செய்யப்பட்ட வேற்று நாட்டு இயக்கத்தை பற்றி பேசவே தடைவிதிக்கும்.

பக்கத்து நாட்டில் தங்கள் சகோதரர்கள் படுகொலை செய்யப்படுகிறார்களே அதனை ஏனென்று கேட்கக்கூடாதா என்று கேட்டால் கண்டிப்பாக கேட்கிறேன் என்று தமது குடிமக்களையே அது ஏமாற்றப் பார்க்கும்.

ஒரு இனப்படுகொலையை தடுப்போம் என்று முழங்கும். ஆனால் அப்படுகொலையை தடுக்க முயல்வோர்களை ஆதரிக்காது. பாராமுகமாக இருக்கும்.

இப்படி ஒரு விசித்திரமான நாட்டின் ஒரு விசித்திரமான மாகாணம்தான் தமிழ்நாடு.

சுயநலக் கூட்டங்களும் , அடுத்த தேர்தலைத் தாண்டி உலகமே அழிந்துவிடப் போகிறது என்ற எண்ணம் கொண்ட அரசியல் கட்சிகளும் , இனமாவது , மண்ணாவது – எல்லாம் தன் கட்சிப்பதவிக்கும் , மக்கள் பிரதிநிதிகளாகவும் முன் தூசு என்ற மகா பரந்த எண்ணம் கொண்ட தமிழர்கள் தான் அதன் குடிமக்கள் அல்லது மாக்கள்.

இதில் ஜனநாயகம் என்பது அதிகாரத்தில் இருக்கும் கட்சிகளுக்கு ஆதரவான முழக்கங்கள் ஒரு தரப்பிலும் , எதிரிக்கட்சிகளின் எதிர்ப்பு முழக்கங்களும் மட்டுமே கொண்டதொரு வெற்று சண்டை மடம்.

பிழைப்பென்று வந்தபின்னர் இதில் நாடென்ன , இனமென்ன ,

நலமென்ன , குறையென்ன ,

அவனென்ன , இவனென்ன??

எல்லா முழக்கங்களிலும் பிழைப்பையொட்டியே நிலையை எடுப்பது அரசியல் வியாபார காந்தங்கள் லேட்டஸ்ட் கார்ப்பரேட்களிடம் கற்று வந்த பாடம். 

நீ சொல்லும் கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை,ஆனால் அதைச் சொல்லும்

உனது உரிமைக்காக நான் உயிரைக் கொடுத்தும்போராடுவேன்” 

என்று வால்டேர் சொன்னாராம்.


கருத்துச்சுதந்திரத்தை நறுக்கென்று சொல்லும் இன்னொரு திருக்குறள் அல்லவா இது?

ஒரு இயக்கத்தைப் பற்றி அவதூறாகவும் , தூற்றியும் பேச இருக்கும் உரிமை அத்தகைய அவதூறுகளை கண்டிக்க இல்லையாம் .

என்னய்யா உங்கள் உரிமை?

பாகிஸ்தான் தீவிரவாதி இந்திய கோர்ட்டில் தனக்காக வாதிட இந்திய வக்கீலை வைத்துக் கொள்ளலாம் , அவனை நியாயப்படுத்திப் பேசலாம். வெளிநாட்டை சேர்ந்த ஒருவனை தன் அண்ணன் என்று அழைப்பது தவறாம் .

என்னய்யா உங்கள் நியாயம்?


சீமான் , கொளத்தூர் மணி மற்றும் மணியரசன் அவர்களைக் கைது செய்தமையானது கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் செயல். கட்சி வேறுபாடின்றி வன்மையாகக் கண்டிக்கப் பட வேண்டிய செயல் இது!!!

எமர்ஜென்சியின் இன்னொரு முகம். இதில் வேடிக்கையென்றால் , எமர்ஜென்சியை எதிர்த்து போராடியதாகச் சொல்லும் தி.மு.க. சற்றேறக்குறைய அதே பாணியை கடைபிடிப்பதுதான்.

கூட்டணி தர்மத்திற்காக செய்வதாக திராவிட முன்னேற்றக் கழகம் சொல்லிக்கொண்டாலும் , அது அக்கழகத்தின் அடிப்படைக்கே வேட்டு வைப்பது என்பதை இனிமேலாவது புரிந்து கொண்டால் சரிதான்.

ஜனநாயகத்தின் பாதுகாவலன் என்று சொல்லிக்கொண்டே ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைத்ததுதான் காங்கிரசின் வரலாறு. இதில் ஆச்சர்யமென்னவென்றால் , இப்போது அதே திசையிலேயே திமுகவும் பயணிப்பது தான்.

இதில் இன்னொரு வேடிக்கை, வழக்கமாக கருத்துச் சுதந்திரம் என்று கூப்பாடு போடும் பத்திரிகைகள் இப்போது இந்தக் கைதை வேடிக்கை பார்ப்பது. கருத்துச்சுதந்திரத்தை பாதுக்காக்கக் கூட தமக்கு உகந்த கருத்துக்களைச் சொன்னால் தான் குரல் கொடுப்போம் என்று நவீன நான்காம் தூண்களும் ஊமையாகிவிட்டன.

ஆனால் ஒன்று , எல்லாவற்றிற்கும் காலம் பதில் வைத்திருக்கிறது. அதைத்தான் நமக்கு வரலாறு கற்றுக்கொடுத்திருக்கிறது.

தமிழினம் தலைநிமிரும் காலம் வந்தே தீரும்.

அப்போது இந்தப் புல்லுருவிகளின் கோவணம் கிழிந்து அம்மணமாக ஓடத்தான் போகிறார்கள்.!!!

நன்றி-மதிபாலாபக்கங்கள் http://baluindo.blogspot.com/

Thursday, December 11, 2008

“நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன்…… ஆனால்……”

“நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன்…… ஆனால்……”

vps2

முதலிலேயே சொல்லிவிடுவது நல்லது. ஓட்டு அரசியலின் மீது நம்பிக்கையோ…… மரியாதையோ இல்லை எனக்கு.. ஆனால் எனக்கு இல்லை என்பதற்காக அரிதான பூக்கள் பூக்காமலா இருக்கும் அங்கு? அப்படிப்பட்ட ஒன்றுதான் விஸ்வநாத் பிரதாப் சிங்.

வி.பி.சிங் 1931 ல் பிறந்தார்.
1980 ல் உ.பி.முதல்வரானார்.
1984 ல் மத்திய நிதியமைச்சரானார்.
பிற்பாடு ராணுவ அமைச்சரானார்.
போபர்ஸ் காந்தியால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
1989 ல் பிரதமரானார்.
1990 ல் ஆட்சியை இழந்தார்.
2008 ல் இறந்தார்.
என வெறுமனே புள்ளிவிவரங்களுக்குள் புதைத்துவிடக் கூடிய வாழ்க்கையா அவருடையது?

91 ஆம் ஆண்டு புது தில்லி ரயில் நிலையத்தில் இறங்குகிறேன். எதேச்சையாக எதிரில் நிற்கும் ரயில்களைப் பார்த்தவனுக்கு பேரதிர்ச்சி. பெரிய பெரிய கொட்டை எழுத்துக்களில் “விபி.சிங்கைக் கொல்வோம்” …… “கொல்பவர்களுக்குப் பரிசு 1 லட்சம்”…… என வெள்ளை நிறத்தில் வண்டி முழுவதும் எழுதிக் குவிக்கப்பட்டிருந்தது. அந்த வேளையில்…… அதை எழுதியவர்களின் அறியாமையை விடவும்…… அதை ஆறு மாதங்களாகியும் அழிக்காமல் விட்டிருந்த அதிகார வர்க்கத்தின் வக்கிரம்தான் என்னை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. தமிழகக் கட்சிகளுக்குள் எவ்வளவுதான் குடுமிபிடி சண்டை இருந்தாலும்…… ஒரு ஆளுங்கட்சித் தலைவரையோ…… ஒரு எதிர்க்கட்சித் தலைவரையோ தரக்குறைவாக விமர்சித்து எழுதியிருந்தால் அதை இரவோடு இரவாக போலிசாரே அழித்துவிடுவார்கள். ஆனால் வி.பி.சிங் அவர்கள் ஆட்சியை இழந்து ஆறுமாதமாகியும் அப்படியே அதை அழிக்காமல் விட்டிருக்கிறார்கள் என்றால் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறேன். ஒரே ஒரு காரணம்தான்.

அது: மண்டல் கமிஷன்.
(வடக்கு எதிலும் நம்மை விட ஸ்லோ பிக்கப்தானே……)

ஆண்டாண்டு காலமாக தாங்கள் மட்டுமே அனுபவித்து வந்த பதவிகளும், பெருமைகளும் இந்தப் “பாழாய்ப் போன” மண்டலால் எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டி வந்துவிட்டதே என்கிற எரிச்சல்……

மனுதர்மத்தின் பேரால் கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு
மண்டல்தர்மத்தின் மூலம் கல்விக்கூடங்களின் கதவு திறக்கப்படுகிறதே என்கிற ஆத்திரம்……
இவை எல்லாம்தான் அவர்களை அப்படி எழுத வைத்திருக்கிறது.

இன்னமும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது வி.பி.சிங்கின் அந்த வரிகள் :
மஸ்ஜித் பிரச்சனையை முன்னிருத்தியவர்களை
மண்டலால் கவிழ்த்துவிட்டாரே என்கிற ஆத்திரம் தலைக்கேற அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டு வெளியில் வருகிறார் அடல் பிகாரி. அடுத்து வி.பி.சிங்கை நோக்கி நீளுகின்றன பத்திரிக்கையாளர்களின் மைக்குகள்.

“என்ன…… இவ்வளவு மோசமான தோல்வியைத் தழுவியிருக்கிறீர்களே……?” என்கிறார்கள் பத்திரிக்கையாளர்களும் தொலைக்காட்சியினரும்.

“ஆம்…… நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன். ஆனால்…… பலகோடி பிற்படுத்தப்பட்டவர்களின் நலனுக்காக வந்த மண்டல் குழுவின் பரிந்துரைகளை இந்திய அரசியலின் நிகழ்ச்சி நிரலில் வைத்த பிற்பாடு.”

(Yes. I am defeated.
But Mandal is in Agenda.)
என்று வெகு நிதானமாக தெரிவித்தபடி இறங்கிச் செல்கிறார் வி.பி.சிங்.

ஆம். அதுதான் நிதர்சனமான உண்மை.

தங்களது இந்திரா காந்தியின் காலத்தில் கண்டுகொள்ளவே படாத மண்டல் குழுவின் பரிந்துரைகளை……

தங்களது ராஜீவ் காந்தியின் காலத்தில் குப்பைக் கூடையில் வீசப்பட்ட மண்டல் குழுவின் பரிந்துரைகளை……

தங்களது நரசிம்மராவ் காலத்தில் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் காங்கிரசுக்கு ஏற்பட்டது என்றால் அதற்குக் காரணம் விஸ்வநாத் பிரதாப் சிங்தான்.

அவ்வளவு ஏன்…… பா.ஜ.க.வின் கட்சித் தலைமையில் கூட பிற்படுத்தப்பட்டவர்களைக் கணக்குக் காட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்றால் அதற்கும் விஸ்வநாத் பிரதாப் சிங்தான் காரணம்.

நேரு யுகத்தில் நேரடி அரசியலில் நுழைந்தாலும்
நேரு பரம்பரை செய்யத் தவறியதை
செய்யத் துணியாததை செய்து காட்டியவர்தான் வி.பி.சிங்.

ஆனால் வி.பி.சிங்கை வெறுமனே இட ஒதுக்கீட்டுக்கான ஆளாக மட்டும் ஒதுக்கிவிடுவதில் ஒப்புதலில்லை எனக்கு. எப்படிப் பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டுமே சுருக்கிக்காட்டி சுகம் காணுகிறார்களோ சிலர் அப்படி. பிரதமர் பதவியை விட்டு விலகிய பின்பு அவர் வாழ்ந்த வாழ்க்கை அப்படிக் காட்டவில்லை நமக்கு. புற்று நோயோடு போராடியபடியும்…… வாரத்தில் மூன்று நாட்கள் சிறுநீரகத்துக்கான டயாலிசிஸ் செய்தபடியும்…… டெல்லி குடிசைப் பகுதி மக்கள்…… ரிக்க்ஷா இழுப்பவர்கள்…… வாழ்வுரிமைக்காக அவர் நடத்திய போராட்டங்கள் ஏராளம்.

தனது ஒத்துழைக்காத உடலோடு ஒருபுறம் போராடிக் கொண்டே மறுபுறம் தலித்துகள்…… நிலமற்ற தொழிலாளர்கள்…… “நலத்”திட்டங்களின் பேரால் தங்களது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள்…… என எண்ணற்ற விளிம்புநிலை மக்களுக்காக தன் பங்களிப்பை அளித்து வந்தார்.

ஆனால்…… அவையெல்லாம் வட இந்தியப் பத்திரிக்கைகளின் பதினாறாம் பக்கச் செய்தியாகக் கூட இடம் பெறவில்லை. அவர் நம்மிடமிருந்து விடை பெற்ற அன்று மும்பையில் நடந்த துயரமான துப்பாக்கிச் சூடுகளுக்கும், குண்டுவெடிப்புகளுக்கும் கூட மனதார நன்றி சொல்லியிருப்பார்கள் வடபுலத்து ஊடகவியலாளர்கள். எப்படியோ இந்தச் செய்திகளால் அந்த மனிதனது மரணம் பின்னுக்குத் தள்ளப்பட்டதே என்று. கமண்டலங்களின் கதையை மண்டலால் முடிவுக்குக் கொண்டு வந்தவன் மீது ஆத்திரம் இல்லாமலா இருக்கும்?

இவை எல்லாவற்றை விடவும் ராஜகுடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும்…… பிரதமர் பதவியையே வகித்திருந்தாலும்…… இன்றைய இந்திய அரசியல் அமைப்பு முறை அவருக்குள் ஏற்படுத்திய ஏமாற்றமும்…… அதிருப்தியும்…… அவரை “நான் மாவோயிஸ்ட் ஆக விரும்புகிறேன்” என்று பிரகடனப்படுத்தும் அளவிற்குக் கொண்டு சென்றது.

ஆம். அதனை அவரது வார்த்தைகளிலேயே சொல்வதானால்……

“ உயர் தொழில் நுட்ப நகரங்களின் பேராலும்…… சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் பேராலும்…… லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை வழங்குவதாக ஒவ்வொரு முதல்வரும் அள்ளி வீசுகிறார்கள். ஒவ்வொரு தொழில் அதிபரும் தனது பொருளுக்கான விலையாக அரசு இவ்வளவு தந்தாக வேண்டும் என அரசுக்கு ஆணையிடுகிறார்கள். ஆனால்…… “உனது விளைபொருள்களுக்கான விலையை நாங்கள்தான் தீர்மானிப்போம்” என்று விவசாயிகளிடம் ஆணை பிறப்பிக்கிறது அரசாங்கம். இந்த மக்களின் குரலுக்கு நீங்கள் செவிமடுக்க மறுத்தால் நாளை அவர்கள் ஆயுதம் ஏந்துவதை எவராலும் தடுக்க முடியாது. உண்மையில் நான் மாவோயிஸ்ட் ஆகவே விரும்புகிறேன். ஆனால் அதற்கு என் உடல் நிலை மட்டும்தான் தடையாக இருக்கிறது.”

உண்மைதான்.
‘பொருளாதாரச் சீரழிவு என்கிற எரிமலையின் மீதுதான் உட்கார்ந்து கொண்டிருக்கிறது இந்தியா.’

சாதீய ஏற்றதாழ்வுகளும்
மதங்களின் மடைமையும்
பொருளாதாரப் பாகுபாடுகளும்
அதன் சீற்றத்தைக் கூட்டுமேயன்றி
குறைக்கப் போவதில்லை.

எரிமலையற்ற வாழ்க்கைதான் அந்த எளிய மனிதனின் கனவு. பாதியில் அறுபட்ட அக்கனவின் மீதியை நனவாக்குவது நம் கைகளில்தான் இருக்கிறது.

சென்றுவா எம் நண்பனே.



நன்றி

http://pamaran.wordpress.com

இலங்கையில் தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலைகளை நிறுத்தக் கோரி போராடு வோம் :


* OMR சாலையில் டபுள் பெட்ரூம் பிளாட் வாங்குவது பற்றி திட்டமிடுகிறோம் நாம்
* மேலிருந்து விழும் குண்டுகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக குடிசைகளிலிருந்து வெளியேறி காடுகளில் தஞ்சம் புகுகிறார்கள் அவர்கள்
* இரவு கொசுக்கடியிலிருந்து தப்பிக்க என்ன வழி என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம் நாம்
* பகலில் கடிக்க வரும் பாம்புகளிலிருந்து தப்பிக்கும் வழியறியாது அடர்ந்த வனங்களில் தினமும் இறக்கிறார்கள் அவர்கள்
* அடுத்த வேளை உணவு, KFC Chicken-ஆ அல்லது Pizza Hut-ஆ என்று நண்பர்களுடன் பேசுகிறோம் நாம்
* நாளைக்காவது ஒரு வேளை உணவு கிடைக்குமா என்று சொந்த நாட்டில் அகதிகளாகத் தவிக்கிறார்கள் அவர்கள்
* பொங்கலுக்கு ஊருக்குப் போக இரண்டு மாதங்களுக்கு முன்பே online reservation செய்கிறோம் நாம்
* எப்போது தாய்நாடு போவோம் என்பது குறித்து யாதொரு நம்பிக்கையுமின்றி அகதிகளாக உலகெங்கும் சிதறிக் கிடக்கிறார்கள் அவர்கள்
* சத்யம் சினிமா, MGM ரிசார்ட், சனிக்கிழமை இரவுக் கொண்டாட்டங்கள் என சுகமாய் வாழ்கிறோம் நாம்
* ஒவ்வொரு நொடியைக் கழிப்பதும் போராட்டமாய் வாழ்கிறார்கள் அவர்கள்
* நாமும் தமிழர்கள், அவர்களும் தமிழர்கள் எனில், அவர்களுக்காக என்ன செய்யப் போகிறோம் நாம்?
செய்ய வேண்டியது ஆயிரம் இருப்பினும், சிங்கள பேரினவாத அரசுக்கு எதிரான நமது எதிர்ப்பை, ஈழத்தமிழர்களுக்கான நமது ஆதரவைத் தெரிவிப்போம், வாருங்கள் நண்பர்களே!

Friday, November 28, 2008

வீரவணக்கம்

வீரவணக்கம்

சமூகநீதிப்போராளி 
வி.பி. சிங் 
அவர்களுக்கு
வீரவணக்கம்
            

Wednesday, November 5, 2008

கைதுகளால் மட்டும் நிலைநிறுத்தப்படும் "இந்தி"யத் தேசிய ஒருமைப்பாடு

பிரதி எடுக்க
 நண்பருக்கு அனுப்ப
கைதுகளால் மட்டும் நிலைநிறுத்தப்படும் "இந்தி"யத் தேசிய ஒருமைப்பாடு - க.அருணபாரதி

கைதுகளால் மட்டும் நிலைநிறுத்தப்படும் "இந்தி"யத் தேசிய ஒருமைப்பாடு - க.அருணபாரதி

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்து வரும் இந்த சமயத்தில் தேவையில்லாமல் சில கைது நடவடிக்கைகளில் கலைஞர் தலைமையிலான தமிழக அரசு ஈடுபட்டிருப்பதற்குத் துண்டுதலாக செயல்பட்டக் கும்பல் யார் என்பதனை நாடறியும். அந்தக் கும்பலை அம்பலப்படுத்தி எழுதினால் அது சாதீயவாதமாக சிலருக்குத் தென்படுகிறது. என்ன செய்ய? "குற்றமுள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும்."
 
"இந்தி"ய ஒருமைப்பாட்டிற்கு எதிராக பேசியதாக ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ, அதன் அவைத் தலைவர் எம்.கண்ணப்பன் ஆகியோர் முதலில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர், இராமேசுவரத்தில சிங்கள இனவெறி அரசிற்கு ஆயதங்கள் வழங்கும் "இந்தி"ய அரசைக் கண்டித்து திரைக் கலைஞர்கள் நடத்தியப் பொதுக் கூட்டத்தில், பிரிவினையைத் தூண்டிப் பேசியதாக இயக்குநர்கள் சீமான, அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
 
தமிழகக் காவல்துறை இவர்கள் மீது ("இந்தி"ய) தேசத் துரோகக் குற்றத்தின் மிகப்பிரபலமான 123(பி) பிரிவின்படி வழக்குப் பதிவு செய்துள்ளது. அந்த பிரிவில் இவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்படாமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற திட்டத்துடன் சட்டவிரோ செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities Act -1967) சிலப் பிரிவுகளின் படியும் வழக்குப் பதிவு செய்துள்ளது.
 
இவர்கள் செய்த குற்றம் தான் என்ன? எவ்வகையில் இவர்கள் பிரிவினைக்குத் தூண்டினார்கள்? இவர்களைப் பிரிவினைக்குத் தூண்டியது எது? கைது செய்யப்பட்டவர்கள் தனிநபர்கள் அல்ல. தமிழ்த் தேசிய இன மக்களின் கருத்துக்களை பிரதிபலிக்கும் தலைவர்கள், கலைஞர்கள். குற்றங்களை செய்தவர்களை விட அதனைச் செய்யத் தூண்டுபவர்களுக்குத் தான் அதிக தண்டனையாம். சட்டம் கூறுகிறது. அப்படியெனில் இவர்களை "இக்குற்றச் செயலுக்கு" தூண்டியது எது என்று ஆராய்வோம்.
 
இந்தியா ஒரு தேசமல்ல. தனக்கென தனிப்பண்பாடு, மொழி, பொருளியல் என பல்வேறு தேசிய இனங்கள் வாழ்கின்ற ஒரு துணைக் கண்டமே ஆகும். இப்படி வாழ்ந்த பல்வேறு நாடுகள் அடக்குமுறையாலும் மக்களின் அனுமதியின்றும் ஒருங்கிணைக்கப்பட்டு இந்தியா என்ற ஒற்றைத் தேசமாகக் கட்டமைக்கப்பட்டது. இப்படிப்பட்ட துணைக்கண்டங்களில் ஒற்றையாட்சி (Unitary) எனப்படும் அரசியலமைப்பு, தேசிய இனங்கள் ஒவ்வொன்றும் ஒன்றன் மீது ஒன்று ஆதிக்கம் செலுத்தி சில தேசிய இனங்கள் கொழுக்கவும் சில தேசிய இனங்கள் மிகவும் பின்தங்கிய நிலைக்குச் செல்லவும் வழிவகுக்கும். இதற்கு மாற்றாக கூட்டாட்சியையும் சிலர் முன்மொழிவர். அந்த கூட்டாட்சியும் ஒவ்வொரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைகளை அங்கீகரிப்பதாக அமைய வேண்டுமே தவிர ஒரு தேசிய இனத்தின் ஒற்றைச் சார்பு தலைமையில் அமையக்கூடாது. இந்த உண்மைகளை புரிந்து கொள்ளாமல் கட்டமைக்கப்பட்டது தான் "இந்தி"ய அரசியலமைப்புச் சட்டம்.
 
இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம், பல்வேறு தேசிய இனங்களின் மீதும் "இந்தி" மொழி ஆதிக்கம் செலுத்தவும், "இந்தி" பேசும் மக்கள் பெரும்பான்மையாக இருப்பதால் மற்ற அயல் தேசிய இனங்கள் மீது அவர்கள் அரசியல் ரீதியாகவும் பொருளியல் ரீதியாகவும் ஆதிக்கம் செலுத்தவும் வழிவகுத்திருக்கிறது. அப்படி தான் செயல்படுத்தப்பட்டும் வருகின்றது.
 
1965-ல் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முயன்ற "இந்தி"ய அரசை எதிர்த்துப் போராடி மறத்தமிழர்கள் 300க்கும் மேற்பட்டவர்களை "இந்தி"ய தேசிய இராணுவம் சுட்டுக் கொன்றதை எந்தத் தமிழனால் மறக்க இயலும்?
 
இப்படிப்பட்ட இந்திய அரசக் கட்டமைப்பில் சிக்குண்ட பல தேசிய இனங்கள் ஒன்றோடு ஒன்றோடு மோதும் போது அவற்றிற்கு நடுவராக இருந்து தீர்க்க வேண்டிய இந்திய அரசு இதுவரை என்ன செய்திருக்கிறது? வேடிக்கைப் பார்ப்பதை வாடிக்கையாகக் கொண்டதைத் தவிர? இதற்குக் காரணம் அதன் ஒற்றைச் சார்புத் தன்மை தான் என்பதை எவரால் மறுக்க இயலும்?
 
காவிரிச் சிக்கலில் கர்நாடகம் தமிழக நீர் உரிமையை மறுத்து இந்திய அரசின் உச்சநீதிமன்றத்தையும் மதிக்கத் தவறியது. தமிழர்கள் கன்னட வெறியர்களால் தாக்கப்பட்டார்கள். இந்திய அரசு என்ன செய்திருக்க வேண்டும்? உடனடியாக பிரச்சினையைத் தீர்க்க ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.ஆனால் அது நடக்கவில்லை. வேடிக்கைப் பார்த்தது "இந்தி"யா. இதே நிலை தான் மற்றப் பிரச்சினைகளிலும் தொடாகின்றது.
 
இந்தியா என்ற கட்டமைப்பை மறுத்து கர்நாடகம் செய்த அராஜகங்களை இந்திய அரசு வேடிக்கைப் பார்க்கும். ஆனால் தமிழன் செய்தால் அவன் மீது தேச விரோத முத்திரைக் குத்தும். ஒவ்வொருத்தருக்கும் ஒருவகைப்பட்ட நீதி. இது தானே பார்ப்பனியம். இப்படித் தானே இந்திய அரசு செயல்பட்டது. செயல்பட்டுக் கொண்டு்ம் இருக்கிறது.
 
மலையாளிகள் முல்லைப் பெரியாறுப் பிரச்சினையிலும் கன்னடாகள் காவிரி நீர் சிக்கலிலும் தமிழகத்தின் நியாயமான உரிமைகளை மறுத்தும் இந்திய அரசின் உச்சபட்டச நீதிமன்றமான உச்சநீதிமன்றத்தை எதிர்த்தும் பேசலாம். செயல்படலாம். என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். இந்திய தேசியம் கட்சிகளும், இந்தியத் தேசிய வாதிகளுக்கும் அதைத் தடுக்க வக்கில்லை. பேசுவதற்குத் துப்பில்லை. ஆனால் தமிழகம் தனது நீண்ட காலக் கனவான சேது சமுத்திரத் திட்டம் தடுக்கப்படுவதைக் கண்டித்து பந்த் நடத்தினால் மட்டு்ம் இந்திய அரசின் உச்சிகுடுமி மன்றம் ஞாயிற்றுக் கிழமை விடுப்பு என்றாலும் அவசர அவசரமாகக் கூடிக் கண்டிக்கும். இது தான் இந்திய தேசியமா..?
 
இவற்றிக்கு எல்லாம் மேலாக "இந்தி"ய அரசு ஈழப்பிரச்சினைத் தொடர்பில் என்ன செய்து கொண்டிருக்கிறது? "இந்தி"ய அரசு தனது ஆரிய இனவெறித் தன்மையுடன் சிங்கள அரசிற்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் இராணுவ உதவிகளையும் இன்ன பிற உதவிகளையும் திட்டமிட்டு பல வருடங்களாக செய்து வருவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? இதனைப் பல்வேறு சமயங்களில் தமிழகத்தில் உள்ள பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகள் வெளிப்படுத்தியும் அதனை தமிழக அரசோ "இந்தி"ய அரசோக் கண்டுகொள்ளாமல் இருந்தன. அண்மையில் தான் இவ்வுதவிகள் அம்பலப்படுத்தப்பட்டதோடு அதனை இந்த நிமிடம் வரை "இந்தி"ய அரசு மறுக்கவில்லை என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.
 
"இந்தி"ய அரசு சிங்களனுக்கு உதவ வேண்டிய அவசியம் என்ன? அவனுக்கு உதவினால் இந்தியாவிற்கு கிடைக்கும் லாபம் தான் என்ன? பாகிஸ்தான், சீனம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சிங்களனுக்கு ஆயுதங்களை வெளிப்படையாகக் கொடுப்பது உலகில் அனைவருக்கும் தெரியும். இது இந்திய அரசுக்கும் அதன் பாதுகாப்புத் துறைக்கும் தெரியாதா? தெரியும். இருந்த போதும் அவாகள் அமைதி காத்தார்கள். தம் இன எதிரிகளான தமிழர்கள் தானே அழிகிறார்கள் என்பதால் அமைதி காத்தார்கள். ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட போது சில புன்முறுவல்களையும் தமிழக மீனவர்கள் கொல்ப்பட்ட போது வாய்விட்டு சிரித்து மகிழ்ந்திருப்பார்கள், இந்த "இந்தி"யத் தேசிய வாதிகள்.
 
அண்டை நாடு ஆயதங்கள் வாங்கிக் குவிப்பதால் நம் நாட்டிற்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமோ என்ற எண்ணம் "இந்தி"ய பாதுகாப்புத் துறைக்கு ஏன் ஏற்படவில்லை? ஏன் தமது அடிமையான தமிழக மீனவனை சிங்களப் படைகள் சுட்டுக் கொன்ற போது கூட அவன் மீதும் "இந்தி"யன் என்ற முத்திரைக் குத்தியுள்ளோமே என்ற எண்ணம் கூட அவர்களுக்கில்லை. உயிரைப் பணயம் வைத்து தமிழக மீனவாகள் பிடித்து வரும் மீன்களுக்கு அந்நிய செலாவணி வரி கேட்டு பிச்சை எடுக்க மட்டும் வந்துவிடுவார்கள் இந்த "இந்தி"ய வரிப் பொறுக்கிகள். இதுவே பாகிஸ்தான் தனது படைகளை எல்லையில் குவித்தாலோ சீனா படைகளை குவித்தாலோ இந்தியத அமைதியாக இருந்திருக்குமா? அப்படியெனில் சிங்களன் ஆயதங்கள் குவித்த போது இந்திய அரசு அமைதியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் தானும் ஆயுதங்களை வழங்கியது எதற்காக?
 
ஏற்கெனவே நீர்சிக்கல்களால் அயல் தேசிய இன மாநிலங்கள் "இந்தி"ய கட்டமைப்பை மதிக்காமல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது என்னடா "இந்தி"யத் தேசியம் என்று பல முணுமுணுப்புகள் தமிழகத்தில் எழந்திருந்ததை எவராலும் மறுக்க முடியாது. மின்வெட்டால் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கும் பொழுதுகூட நம் தமிழ் மண்ணில் உள்ள நெய்வேலி மண்ணிலிருந்து மின்சாரத்தைப் பிடுங்கி இந்த நீர்தரமாட்டோம் என்று அடம்பிடிக்கும் அடாவடி அயல் தேசிய இனத்தவருக்கு பகிர்ந்தளிக்கிறது "இந்தி"ய அரசு. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, நமது நாடு என்று நாம் "இந்தி"யாவை நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதன் தலைமையோ நம் தொப்புள் கொடி உறவுகளை கொன்று குவிக்க ஆய்தங்கள் வழங்கி உதவிப்புரிகிறதே என்ற வலி தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது உண்மையா இல்லையா? இந்த உண்மையை எவ்வளவு நாள் நாம் பொத்திப் பொதத்தி வைக்க இயலும்?
 
பிரிவினைக்குத் தூண்டியது கைது செய்யப்பட்டவர்கள் அல்ல. அவர்களை அவ்வாறு பேச வைத்த அயல் தேசிய இனங்களும் அதைக் கண்டு கொள்ளாமல் கள்ள மவுனம் சாதிக்கும் "இந்தி"ய அரசுமே ஆகும். இதனை முதலில் "இந்தி"யத் தேசிய வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று பார்ப்பன இந்தியத் தேசியக் கும்பல் கூச்சல் போடுகின்றது. அப்படியெனில் முதலில் ஆனந்த விகடன் கருத்துக் கணிப்பிலும் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் கருத்துக் கணிப்பிலும் விடுதலைப் புலிகளை ஆதரித்த பெரும்பான்மை தமிழக மக்களை சிறையில் தள்ளுவார்களா "இந்தி"யத் தேசியவாதிகள்? தமிழ் மக்களின் கோப நெருப்பே உங்களைப் சுட்டுப் பொசுக்கிவிடும். கைது செய்யப்படுவது மனிதர்கள் தானேத் தவிர மக்கள் மனிதில் உள்ள கருத்துக்கள் அல்ல!

- தோழர் அருணபாரதி

நன்றி. -http://www.tamilseythi.com/

Friday, October 31, 2008

ராமன் தேடிய சீதை

சீதை அலறித் துடித்தாள். தீநாக்குகள் அவளை சுட்டன. “என்னை கொன்றுவிடாதீர்கள், நான் ஒரு பாவமும் அறியாதவள்” சீதை கதறினாள். ராமன் ஒரு குரூரச் சிரிப்போடு அவளைப் பார்த்துக் கொண்டு நின்றான். அரியாசனத்திற்காக சோரம் போன சுக்கிரீவனும் விபீடணனும் செய்வதறியாது தலைகுனிந்து நின்றனர்.
அப்பொழுது சத்தம் கேட்டு அங்கே அனுமானும், லக்குமணனும் மற்றவர்களும் ஓடி வந்தார்கள். அவர்கள் ஓடி வருவதைப் பார்த்த ராமன் சீதையை கருக்கிக் கொண்டிருந்த தீயை அணைத்தான். “சீதை தன்னை தூய்மையானவள் என்று நிரூபிக்க தீயில் இறங்கிவிட்டாள், நல்ல வேளை அக்கினிதேவன் காப்பாற்றி விட்டான்” ராமன் எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னான்.
அப்பொழுது சீதை தப்பி விட்டாளே தவிர, அவளது வாழ்க்கை அதன் பிறகு நரகமாகி விட்டது. தினமும் ராமன் குடித்துவிட்டு வந்து சீதையை அடித்து உதைப்பான். மிகக் கொடிய வார்த்தைகளால் அவளை துன்புறுத்துவான். சீதைக்கு ஆறுதல் சொல்வதற்கு யாரும் இல்லாமல் போய்விட்டது. இடையிடையே சீதை தன்னுடன் கண்ணியமாகவும் அன்பாகவும் நடந்து கொண்ட ராவணனை நினைத்துக் கொள்வாள்.
ஒரு நாள் ராமன் குடித்துவிட்டு போதை தலைக்கேற ஆடியாடி வந்தான். சீதையைக் கண்மண் தெரியாமல் அடித்தான். அவளை இனிமேல் தன்முன் நிற்கக் கூடாது என்று சொல்லி காட்டுக்கு விரட்டி விட்டான். காட்டில் உள்ள மிருகங்களுக்கு சீதை பலியாகட்டும் என்று நினைத்துக் கொண்டான்
ஆனால் சீதை காட்டுக்குள் வாழப் பழகிக் கொண்டாள். அங்கே இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்தாள். செய்தி ராமனை எட்டியது. ராமனுடைய சந்தேகம் மேலும் அதிகரித்தது. சீதையை இனியும் உயிருடன் விடக் கூடாது என்று நினைத்தான். காடெல்லாம் தேடி அலைந்தான். ஆனால் சீதையை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒரு நேரத்தில் சலித்துப் போய் சீதையை தேடுவதை ராமன் கைவிட்டுவிட்டான். தன்னுடைய வெறியை குடித்தும் பெண்களுடன் கும்மாளமிட்டும் ஆற்றிக் கொண்டான். கிண்ணரி, உதமா, நாட்டியப் பெண்கள், வேலைக்காரப் பெண்கள் என்று யாரையும் ராமன் விட்டு வைக்கவில்லை. அனைவரிடமும் தன்னுடைய பசியை தீர்த்துக் கொண்டான்.
ஒரு நாள் காட்டுக்குள் வேட்டைக்குச் சென்ற ராமனின் படைவீரர்கள் ராமன் தேடிய சீதையை கண்டு விட்டனர். ராமனிடம் ஓடிச் சென்று, அவன் தேடிய சீதையை கண்ட செய்தியை சொன்னார்கள். ராமன் வெறியோடு காட்டுக்கு புறப்பட்டான்.
இந்த முறை சீதையால் தப்ப முடியாது போய்விட்டது. சீதை ராமனிடம் அகப்பட்டு விட்டாள். ராமன் சீதையை கடுமையாக சித்திரவதை செய்தான். சீதை பலவாறு கெஞ்சியும் விடவில்லை. சித்திரவதை தாளாது சீதை மூர்ச்சித்துவிட்டாள். ராமன் ஒரு குழியை தோண்டி அதற்குள் போட்டு சீதையை மூடினான்.
“சீதை பூமாதேவியன் மகள் அல்லவா! அதனால் பூமியே பிளந்து சீதையை உள் வாங்கிக் கொண்டது” சில காலம் கழித்து அயோத்தியில் மக்கள் இப்படிப் பேசிக் கொண்டார்கள்.


- வி.சபேசன்
நன்றி வெப்ஈழம்

Tuesday, October 28, 2008

ஜெயலலிதாவின் சூழ்ச்சி-காங்கிரசின் மகிழ்ச்சி

தொடர்ந்து தனது மோசமான அறிக்கைகளால், தமிழகத்தில் ‘ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு’ என்று இருந்த ஒரு முழமையான நிலையை மாற்றினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் - வைகோ, கண்ணப்பன், இயக்குநர்கள் சீமான், அமீர் போன்றவர்களை கைது செய்திருக்கிறது தமிழக அரசு.
பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள், ‘கைதானவர்களை விடுதலை செய்’ என்கிற நிலைக்கு மாறியிருக்கிறது. இது ஜெயலலிதாவின் தந்திரமான சாமார்த்தியத்திற்கு கிடைத்த வெற்றி. ஈழத்தமிழர்களுக்குக் கிடைத்திருக்கிற இன்னொரு மாபெரும் துயரம். (உணர்ச்சிவசப்பட்டு பேசியவர்களின் பேச்சும், ஒரு வகையில் ஜெயலலிதாவின் சதிக்கு சாதகமாக அமைந்து விட்டது)
ஜெயலலிதாவின் பேச்சைக் கேட்டு, தமிழக அரசு எடுத்த ‘சீமான்-அமீர் கைது நடவடிக்கை’, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக, இதுகாறும் தமிழக அரசு செய்த முயற்சிகளுக்கு பெரிய முட்டுக்கட்டையாக மாறியிருக்கிறது. ‘ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதுகூட பிரச்சினைக்குரியதோ’ என்கிற அச்சம் பொது மக்களிடம் உருவாகியிருக்கிறது.
‘கருணாநிதியே ஆட்சியை ராஜினமா செய்’ என்ற ஜெயலலிதாவின் ஆசையை நிராகரித்த முதல்வர், ‘சீமான்-அமீரை கைது செய்’ என்ற ஜெயலலிதாவின் கோரிக்கையையும் நிராகரித்து இருக்க வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான சூழலை குலைத்த, குலைக்கிற ஜெயலலிதாவிற்கு துணைபோகாமல், உடனடியாக ‘சீமான், அமீரை’ தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.
சமீபமாக ஜெயலலிதா ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எந்த அறிக்கையும் தராமல், ‘விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள்’ என்று குழுப்பத்தை ஏற்படுத்தும் அறிக்கையை தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
நடிகர் வடிவேலு ஒரு படத்தில், ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான். இவன் ரொம்ப நல்லவன்’ என்று வசனம் பேசுவார். அதுபோல் யார் ஆட்சிக்கு வந்தாலும், வைகோவை கைது செய்வது பரிதாபத்திற்குரியது. கைது செய்யப்பட்ட வைகோ, கண்ணப்பனையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
***
தமிழக அரசின் முயற்சியால், சிங்கள ராணுவத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க ஒத்துக் கொண்டிருக்கிறது, இலங்கை அரசு. நேற்றுவரை ‘அப்பாவி தமிழர்கள் தாக்கப்படவில்லை’ என்று ஆணித்தரமாக பொய் சொல்லிக் கொண்டிருந்த ராஜபக்சே, இப்போது இந்த நடவடிக்கையால் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள் என்பதை ஒத்துக் கொண்டிருக்கிறார்.
சிங்கள ராணுவத்தின் வன்முறையை, மனித உரிமை மீறலை இதையே ஒரு ஆதாரமாகக் கொண்டு, ‘போரை நிறுத்த வேண்டும்’ என்று இலங்கை அரசுக்கு இந்தியா கடுமையன நெருக்குதலை தரவேண்டும். இல்லையேல், இலங்கை ராணுவம் தமிழர்களின் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்திக் கொண்டே இருக்கும், நாம் இங்கிருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பிக் கொண்டே இருப்போம், என்பது அவலத்திற்குரியது.
‘ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள்’ என்கிற இந்த முயற்சி, குண்டடிப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு கொஞ்சம் மூச்சு விட உதவும். ஆனால், தமிழர்களை சிங்கள ராணுவத்தின் குண்டுகளிலிருந்து இது காப்பாற்றாது.
40 பேரின் எம்பி பதிவியை வேண்டுமானால் காக்ககுமே தவிர, இது நிலையான, நிம்மதியான வாழ்க்கையை ஈழமக்களுக்கு வழங்காது. அதற்கு ஒரே தீர்வு போர் நிறுத்தம் மட்டும்தான்.


-வே. மதிமாறன்

Wednesday, October 1, 2008

மின்சாரம்

இருளில்
கிராமங்கள்!
நகர சுடுகாட்டில்

மின் தகனம்!
கா.இளையராஜா

Monday, August 18, 2008

மானம்

உன்
கோவணம்
அவிழ்க்கப்பட்டதா?
அவன்
கைகளை
வெட்டு.
கெஞ்சி வாங்கி
கோவணம்
கட்டாதே
அம்மணமாகவே
போராடு.
-காசி ஆனந்தன்

Sunday, August 17, 2008

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது....!

வசதியாகத்தானிருக்கிறது மகனே...
நீ கொண்டு வந்து சேர்த்த
முதியோர் இல்லம்.
பொறுப்பாய் என்னை
ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ
வெளியேறியபோது, முன்பு நானும்
இதுபோல் உன்னை
வகுப்பறையில் விட்டு விட்டு
என் முதுகுக்குப் பின்னால்
நீ கதறக் கதறக்
கண்ணீரை மறைத்தபடி
புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில் எழுகிறது!
முதல் தரமிக்க
இந்த இல்லத்தை
தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்...
அன்று உனக்காக நானும்
பொருத்தமான பள்ளி
எதுவென்றே..
ஓடி அலைந்ததை
ஒப்பீடு செய்கிறேன்!
இதுவரை
ஒருமுறையேனும்
என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும்
என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை மறக்காமல்
அனுப்பி வைப்பதற்காக
மனம் மகிழ்ச்சியடைகிறது.
நீ விடுதியில்
தங்கிப் படித்த காலத்தில்
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற
ஆவல் இருந்தாலும்
படிப்பை நினைத்து
உன்னை சந்திக்க மறுத்ததன்
எதிர்வினையே இதுவென்று
இப்போது அறிகிறேன்!
இளம் வயதினில்
நீ சிறுகச் சிறுக சேமித்த
அனுபவத்தை
என் முதுமைப் பருவத்தில்
மொத்தமாக எனக்கே
செலவு செய்கிறாய்
ஆயினும்...
உனக்கும் எனக்கும்

ஒரு சிறு வேறுபாடு
நான் கற்றுக் கொடுத்தேன்

உனக்கு..
வாழ்க்கை இதுதானென்று
நீ கற்றுக் கொடுக்கிறாய்

எனக்கு...
உறவுகள் இதுதானென்று!
நன்றி: பயணம்

Tuesday, August 12, 2008

தோழர்கள்

நாங்கள் நடந்து கொண்டே இருப்போம்...
எங்கள் கால்கள் நடையை நிறுத்தாது!
நாங்கள் எழுதிக் கொண்டே இருப்போம்...
எங்கள் கைகள் எழுதுவதை நிறுத்தாது!
நாங்கள் பேசிக் கொண்டே இருப்போம்...
எங்கள் உதடுகளும் நாவுகளும் பேசுவதை நிறுத்தாது!
ஆழமான கொள்கைக்கு சொந்தக்காரர்கள் நாங்கள்!!
மனிதகுல விடுதலைக்கு போராடும் தோழர்கள்....

Friday, August 8, 2008

பிழைப்பு

இந்தி படித்தால்
இந்தியாவெங்கும் பிழைக்கலாம்

ஆங்கிலம் படித்தால்
உலகமெங்கும் பிழைக்கலாம்

எப்போது வரும் தமிழனுக்கு
தமிழ்நாட்டில் பிழைக்கும் எண்ணம்?

Thursday, August 7, 2008

ஒற்றுமை

எரிக்கவும் குண்டுவீசி அழிக்கவும் தீயவர்கள் கட்டுகோப்பாக ஒன்று சேர்ந்திருக்கும்போது; மக்களை இணைத்து சேர்க்கவும் அமைதியை நிலைநாட்டவும் நல்லவர்கள் குறைந்தபட்சம் ஓர்அணியிலாவது சேரவேண்டாமா? (when bad people are united to burn and bomb; why can`t good people atleast join together to build and end?)
- மார்ட்டின் லூதர்கிங்.

Sunday, August 3, 2008

இலக்கியம்

களத்தில் நிற்கிறேன்

என் இலக்கியத்தில்
அழகில்லை என்கிறாய்!

தோரணம் கட்டும்
தொழிலோ எனக்கு?

வாளில்-

அழகு தேடாதே...
கூர்மை பார்.

-காசி ஆனந்தன்

பொதுத்தொண்டு

மனிதன் மற்ற மிருகங்களைப்போல் அல்லாமல் மக்களோடு கலந்து ஒரு சமுதாயமாக வாழ்கிறான்.சமுதாயப் பிராணியாக வாழும்போது மற்றவர்களுக்கு ஏதாவது தொண்டு செய்துதான் வாழவேண்டும்,மற்றவனிடமிருந்து தொண்டைப் பெற்றுத்தான் வாழ வேண்டும்.மனிதன் எவ்விதத்திலாவது சமுதாயத்திற்கு பயன்பட்டுத்தான் தீரவேண்டும். அந்த முறையில் என்னால் சமுதாயத்திற்கு ஏதாவது செய்யக்கூடுமானால் வாழவேண்டும் அதல்லாமல் ஏதோ ஓர் ஆள் சோற்றுக்கு கேடாக வாழ்வதென்றால் எதற்க்காக வாழ வேண்டும்.
-தந்தைபெரியார்

Thursday, July 31, 2008

திருந்த மாட்டானா?

கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டதால் ரஜினியின் உண்மையான குணம் வெளிப்பட்டு விட்டது... கன்னடனின் உணர்வை பார்த்த பிறகும், ரஜினியின் உண்மை முகம் தெரிந்த பிறகும்...இனியாவது..அதிகாலை 4 மணிக்கு தியேட்டருக்கு போய் ரஜினி படம் பார்க்க தவம் கிடக்கும்இழி பிறவி தமிழன் திருந்த மாட்டானா?
ஏக்கத்தோடுஎதிர்பார்க்கும் -ஏமாளித்தமிழன்

Wednesday, July 23, 2008

பகுத்தறிவுவாதி.

நான் பகுத்தறிவுவாதி.
எனக்கு
மதம்,
மொழி,
கடவுள்,
மொழி,
நாடு,
அரசு
இதைப்பற்றியெல்லாம் கவலையில்லை.

-தந்தைபெரியார்

Tuesday, July 15, 2008

வெற்றி அல்லது வீரமரணம்

சே குவேரா ஃபிடல்கேஸ்ட்ரோவுக்கு எழுதிய கடிதம்
வெற்றி அல்லது வீரமரணம்
ஃபிடல்,இந்த நேரத்தில் எனக்கு பல விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. உங்களை மரியா அந்தோனியாவின் வீட்டில் சந்ததித்தது; உங்களுடன் வர என்னை நீங்கள் அழைத்தது; புறப்படத் தயாரானபோது நமக்கு ஏற்பட்ட பரபரப்பு.நடக்க இருக்கும் விபரீதம் எனக்கு எப்போது புரிந்தது தெரியுமா? ஒரு நாள் அவர்கள் (புரட்சிப் படையினர்) வந்து, இறந்து போனால் யாருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்? என்று கேட்டார்கள். பிறகு, எல்லாம் புரிந்து விட்டது. ஒரு புரட்சியின் முடிவு, வெற்றி அல்லது வீரமரணம் என்பதைப் புரிந்து கொண்டேன்.இன்று, நாம் வளர்ச்சி அடைந்திருக்கிறோம். அன்று போல் இல்லாமல் பக்குவப்-பட்டிருக்கிறோம். ஆனால், கடந்த காலம் மீண்டும் திரும்புகிறது. க்யூப மண்ணிலே நிகழ்ந்த க்யூபப் புரட்சியில், எனக்கு அளிக்கப்-பட்டிருந்த கடமைகளை நான் நிறைவேற்றிவிட்டேன் என்று நினைக்கிறேன்.ஆகையால், நான், உங்களிடமிருந்தும் நமது தோழர்களிட-மிருந்தும், என்னுடைய க்யூப மக்களிடமிருந்தும் விடை பெறுகிறேன்.
கட்சியின் தலை-மையில் என்னுடைய பொறுப்புகளிலிருந்தும், அமைச்சர் பதவியில் இருந்தும், மேஜர் பொறுப்பில் இருந்தும், க்யூபாவின் பிரஜைக்கான உரிமையி-லிருந்தும் நான் விலகுகிறேன். இனி, எனக்கு க்யூபாவு-டன் சட்ட ரீதியான எந்த உறவும் இல்லை. ஆனால், வேறு வகை-யில் பிணைப்புகள் உள்ளன. நிச்சயமாக அவற்றை என்னால் உதறித் தள்ள முடியாது.கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும்-போது, புரட்சியின் வெற்றியை உறுதிப்படுத்த, நான் நேர்மையாகவும் அர்ப்பணிப்போடும் செயல்பட்டு வந்தேன் என்றே நம்புகிறேன். நான் செய்த ஒரே தவறு என்ன தெரியுமா? சியாரா மிஸ்த்ரா மலைத் தொடரில் கழித்த முதல் சில தினங்களில் உங்கள் மேல் மேலும் அதிக நம்பிக்கை வைக்காமல் இருந்தது. ஒரு புரட்சி-யாளராக, ஒரு தலைவராகப் பரிணமித்த உங்களது குணாதிசயங்களை உடனடியாகப் புரிந்து கொள்ளத் தவறியது.கரீபிய சிக்கல் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த அந்தச் சோகமான, ஆனால் துடிப்பு மிக்க கால கட்டத்தில், உங்களுடன் சேர்ந்து, நமது மக்களின் பக்கம் நின்ற தருணத்-தை இன்றும் பெருமையுடன் உணர்கிறேன். அந்தச் சமயத்தில், நீங்கள் இயங்கியதைப் போல் அவ்வளவு பிரமாதமாக ஒரு தலைவர் செயல்படுவது அபூர்வமானது. உங்களைத் தயக்கம் இன்றி பின்பற்றியதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.என்னுடைய எளிமையான முயற்சிகளும் உதவிகளும் வேறு சில நாடுகளுக்குத் தேவைப்-படுகிறது. க்யூபாவின் தலைவராக நீங்கள் இருப்பதால், உங்களுக்கு மறுக்கப்பட்டதை என்னால் செய்ய முடியும் என்று முடியும்.ஆக, நாம் பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது.ஒரு பக்கம் மகிழ்ச்சியோடும் மறு பக்கம் துயரத்தோடும் நான் என் பயணத்தை மேற்-கொள்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். என் நேசத்துக்குரிய மக்கள் ஒரு சிறப்பான சமுதாயத்தை கட்டி எழுப்புவார்கள் என்ற என் நம்பிக்கையை இங்கே விட்டுவிட்டுப் பிரிகிறேன். புதிய போராட்டக் களங்கள் காத்திருக்கின்றன.நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்-கைக்குப் பாத்திரமாக விளங்குவேன். ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடுவதை - புனிதக் கடமையை மேற்கொள்வேன். அதை நிறைவேற்றவும் செய்வேன். இதுதான் என்னு-டைய பலத்துக்கு ஆதாரமாக இருக்கிறது.எங்கோ, கண் காணாத இடத்தில் என் முடிவு நெருங்குமானால், அந்தக் கடைசித் தருணத்தில் க்யூப மக்களையும், குறிப்பாக உங்களையும்தான் நினைத்துக் கொண்டிருப்-பேன்.எனக்குக் கற்றுக் கொடுத்ததற்கும் அதற்கு நீங்களே ஒரு உதாணரமாக விளங்கியதற்கும் என் நன்றி. என்னுடைய செயல்களின் விளைவு-கள் உங்கள் நம்பிக்கைக்குப் பங்கம் விளை-விக்காமல் இருக்க முயல்வேன். நமது புரட்சியின் அயல்நாட்டுக் கொள்கையோடு எப்போதும் அடையாளம் காணப்பட்டவன் நான். இப்போது, அது தொடர்கிறது. நான் எங்கு இருந்தாலும், ஒரு க்யூபப் புரட்சி-யாளனின் பொறுப்புணர்வோடு விளங்குவேன்.என் மனைவி மக்களுக்கு எந்தச் சொத்-தையும் நான் விட்டுச் செல்லவில்லை. அதற்காக வருத்தப்படவும் இல்லை. இப்படி இருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். அவர்கள் வாழ்வதற்குத் தேவையானவற்றை கவனித்துக் கொள்வதற்கும், குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பதற்கும் ஓர் அரசு இருக்கிறது.இன்னும் பல விஷயங்களை உங்களிடமும், நமது மக்களிடமும் சொல்ல விருப்பம். ஆனால் தேவையில்லை என்றே நினைக்கிறேன். நான் சொல்ல விரும்புவதை வெளிப்படுத்தும் சக்தி, வார்த்தைகளுக்கு இல்லை. காகிதங்கள் வீணாவதைத் தவிர, வேறு பயன் ஏதும் ஏற்பட்டு-விடப் போவதில்லை.நமது முன்னேற்றம் எப்போதும் வெற்றியை நோக்கியே. வெற்றி அல்லது வீரமரணம்.என் முழுமையான புரட்சிகரமான உணர்ச்சி வேகத்துடன் உங்களை ஆரத் தழுவிக் கொள்கிறேன்.

Thursday, July 10, 2008

கண்ணாமூச்சி

சின்னவனாய் அன்று...
என் கண்களை கட்டிவிட்டு ஆட்களை கண்டுபிடி என்றார்கள்.
முயன்றேன்... முடியவில்லை
பெரியவனாய் இன்று- கண்களைத் திறந்துகொண்டே ஆட்களை கண்டுபிடிக்கும் விளையாட்டு...
முயல்கிறேன்... முடியவில்லை.

-காசிஆனந்தன்

Wednesday, July 9, 2008

சலவை

உழைக்காதவன் வியர்வையை
கழுவிக்கொண்டிருக்கிறது...
உழைக்கிறவன் வியர்வை.
-காசிஆனந்தன்

சிந்தித்து ஏற்றுக்கொள்ளுங்கள்

நமக்கு சரிஎன்று படுவதாலோ,அல்லதுஒரு கருத்தை நமக்குச் சொன்னவர்கள் நல்லவர்கள் என்பதாலோ,நம் பெற்றோர்களால் சொல்லப்பட்டது என்பதாலோ அல்லது நம்முடைய ஆசிரியரால் கற்பிக்கப்பட்டது என்பதாலோ எந்த ஒரு கருத்தையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். அதனால் எல்லாருக்கும் என்ன நன்மை அந்தக் கருத்து நம் வாழ்க்கைக்கு அவசியமானதாக இருக்கிறதா என்று நீங்கள் சிந்தித்து உணர்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள்

Monday, July 7, 2008

வயல்

என் தாத்தா என் தந்தையிடம் சொன்னார்
இது நெல் விளையிற இடம் என்று......
என் தந்தை என்னிடம் சொன்னார்

இது நெல் விளைந்த இடம் என்று....
நான் என் மகனிடம் சொல்லுவேன்

நெல் விளைந்த வயல் இருந்தயிடம் என்று......
இரவிக்குமார், சென்னை

இனத் துரோகம்!

"பாரத கலாச்சாரத்தைப் பறைசாற்றும் இதிகாசம்" என்ற பூரிப்பான அறிவிப்புடன், சன் தொலைக்காட்சி ஞாயிறுதோறும் இராமாயணத்தை மெகா தொடராக ஒளிபரப்பத் தொடங்கியிருக்கிறது. புதிய தொழில்நுட்பங்களுடன், "இராமாயணம்" ஒளிபரப்பப்படுவதாக அறிவிப்பு வேறு. ஏற்கனவே "இராம பக்தி"யில் மூழ்கிக் கிடக்கும் வடநாட்டு மக்களின் உணர்வுகளைத் தூண்டி விட்டு, "சங்பரிவாரங்களின்" இராமன் அரசியலுக்கு அவர்களை தயார்படுத்த, என்.டி.டி.வி. இந்தி மொழியில் இராமாயணத் தொடரைத் தொடங்கி விட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டு மண்ணையும், பார்ப்பனியமாக்க இதோ, என்னால் இயன்ற "அனுமான்" உதவி என்று விபிசணராக அவதாரமெடுத்துள்ளது சன் டி.வி.! மெகா தொடர்களை அறிமுகப்படுத்தி பெண்களை அதில் மூழ்க வைத்து தமிழ்நாட்டில் குடும்ப - சமூக உறவுகளில் கடும் நெருக்கடிகளை உருவாக்கியதில் சன் தொலைக்காட்சிக்கு பெரும் பங்கு உண்டு! அடுத்த கட்டமாக, இவர்கள், "இராமராஜ்யத்துக்கு" தாவியுள்ளார்கள் இதற்கான காரணத்தை, ஆழமாக பரிžலிக்க வேண்டியிருக்கிறது. கலைஞர் தொலைக்காட்சி மீதும் - கலைஞர் மீதும் - சன் தொலைக்காட்சிக்குள்ள குடும்ப பகை காரணமாக தனது கலைஞர் எதிர்ப்பை "திராவிடர் இயக்க" எதிர்ப்பாகவே மாற்றிக் கொள்ள சன் டி.வி. முன் வந்துள்ளது மிகப் பெரும் இனத் துரோகம்!
திராவிட இயக்க அரசியலை மூலதனமாக்கி, தொலைக்காட்சி நிறுவனத்தையும், தொழில் நிறுவனத்தையும் வளர்த்துக் கொண்டவர்கள் தான் இந்த சன் டி.வி. குழுமத்தார்! தமிழினத்தை அவமதிக்கும் இராமாயணத்தை எரிக்கச் சொன்னார் அண்ணா! "சக்கரவர்த்தித் திருமகன்" என்ற பெயரில் இராமனை தேசியத் தலைவனாக்க முயன்ற பார்ப்பன இராஜகோபாலாச்சாரிக்கு பதிலடி தந்து, "சக்கரவர்த்தித் திருமகன்" என்ற பெயரில் ராமனின் பார்ப்பன சுயரூபத்தை, கிழித்துக் காட்டினார் கலைஞர். சன் டி.வி. குழுமத்தின் நாயகராகப் போற்றப்படும் முரசொலி மாறன் - 1995 ஆம் ஆண்டு ஜூனியர் விகடன் வார ஏட்டுக்கு அளித்த பேட்டியில் "நாங்கள் இராவணனின் பரம்பரை" என்று பெருமிதத்தோடு அறிவித்தார். ஆனால் அவரின் வாரிசுகளோ, அந்த உணர்வுகளுக்கு சமாதி கட்ட துடிக்கிறார்கள்!
இந்திய அரசின் தூர்தர்சன் ஆண்டுக்கணக்கில் ஒளிபரப்பிய இராமாயணத் தொடரால் உந்தப்பட்ட மக்களின் மத உணர்வை - மத வெறியாக்கி - இராமன் கோயிலுக்கான அஸ்திவாரமாக்கி, அதை ஆட்சி பீடமேறுவதற்கான படிக்கட்டுகளாக மாற்றிக் கொண்டது பா.ஜ.க. கூட்டம்! மீண்டும் இப்போது அதிகாரத்தைப் பிடிக்க, இவர்களுக்கு "ராமன்" தேவைப்படுகிறான். அதற்கான சதிவலை நாடு முழுதும் பின்னப்படுகிறது. சேது சமுத்திரத் திட்டத்தைப் பிடித்துக் கொண்டு, அதற்குள்ளே ராமனைத் தேடி, அந்த கற்பனை ராமனை தமிழகத்திலிருந்து இந்தியா முழுதும் தேர்தல் விற்பனைக்குக் கொண்டு போக முயற்சிக்கிறார்கள். அந்த விற்பனைக்கு மக்கள் சந்தையைத் தயார்படுத்தும் சதி வலைக்குள் சன் தொலைக்காட்சி விருப்பத்தோடு இடம் பிடித்திருக்கிறது.
அயோத்தியில் - பாபர் மசூதி இடிக்கப்பட்ட நேரத்தில், நாடு முழுதும் மதக் கலவரங்கள் வெடித்தபோது, தமிழகம் மட்டும் "பெரியார் மண்ணாக" தனது அமைதியை வெளிப்படுத்தி கம்பீரமாக எழுந்து நின்றது. பார்ப்பனர்களுக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம் - ராமாயணத்தை எடுத்துப் படியுங்கள் என்று தமது சமூகத்தினருக்கு அறிவுரை கூறினார் பார்ப்பனர் ராஜகோபாலாச்சாரி! அந்த எச்சரிக்கையை "வேதவாக்காகக்" கருதி வரும் கூட்டம், இப்போது இராமாயணத்தைப் புரட்டத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் எப்போதுமே பார்ப்பனர் பார்ப்பனியத்தின் பக்கமே நிற்கத் துடிக்கும் சன் தொலைக்காட்சிக் குழுமம் - இப்போது பச்சையாகவே வெளிவந்து விட்டது வரலாறு இவர்களை மன்னிக்காது.
ஆனாலும் திட்டவட்டமாக கூறுகிறோம் - இது இராமாயன காலமல்ல. துரோகத்தை தமிழர்கள் சரியாகவே புரிந்து கொள்வார்கள்.

Saturday, July 5, 2008

மதம்

ஏழைகளின் கோபத்திலிருந்து
பணக்காரர்களை காப்பாற்றும்
எளிய தந்திரத்தின் பெயர்தான்
'மதம்'
- ஆஸ்கார் ஒயில்ட்

Friday, July 4, 2008

அணு ஒப்பந்த அழிச்சாட்டியம்!

கள்ளத் திருடன்பேர் கரிகாற் சோழனா?
கொள்ளைக் காரன் பேர் குமண வள்ளலா?
குடலை உருவி மாலையாய்ப் போடும்
கொள்ளிவாய்ப் பேய் குடியிருக்கும் இடம்பேர்
'வெள்ளை மாளிகை' என்றால் விளங்குமா?
பிணமலை அடுக்கப் பெருக்கத்தின் பேர்தான்
அணு ஒப்பந்தம் அழிச்சாட் டியமா?
அழுகிய மலமே! பழிகார புஷ்ஷே
படுகுழி வெட்டப் பழகிப் பழகிச்
சுடுகாட்டையே நீ தொழுது கிடக்கிறாய்!
உன்சுட்டு விரலுக்கு கட்டுப் பட்டே
பெட்டிப் பாம்பாய் எம்பெருந் தலைகள்
நூறுகோடிப்பேர் தன்மானத்தைக்
கூறுபோட்டு உன்முன் குனிந்து நிற்க
மானங்கெட்ட ஒரு மன்மோகன் சிங்
அலுவாலியா சிதம்பரஅடிமைக் கும்பல்
அடுத்த வரிசையில் அத்வானி... சின்ஹா...
உன் ஆதிக்க வலையில் வீழ்ந்தபின்
தன்னாதிபத்திய தம்பட்டம் எதற்கு?
அங்கேபார்!

கியூபா நாட்டுக்கிழவன் காஸ்ட்ரோ
பிடரி சிலிர்க்கப் பீரிட் டெழுகிறான்
அர்ஜென்டீனா அரிமா முழக்கம்
கயவனே உன் காதுகள் கிழிக்கும்
ஐ.நா.மன்ற சுவர்கள் அதிர
முதுகெலும்புள்ள சாவேஸ் எழுந்து
சாத்தான் என்றுனைச் சாற்றிய வீரம்
சிவப்புக் கேயுள்ள செம்மாந்தப் பெருமிதம்.
-- தமிழேந்தி

Wednesday, July 2, 2008

மனிதாபிமானம் உள்ளவர்கள் படிக்கவேண்டிய பதிவு!?

இந்தியாவில் மூன்று வேளை உணவின்றி தவிப்போர் 50 சதவிகிதத்திற்கு மேல். அதிலும் இரவு உணவின்றி வெறும் வயிற்றுடன் படுக்கைக்குச் செல்லும் குழந்தைகள் மட்டும் 65 சதவிகிதத்திற்கு மேல் என்று ஐநா அமைப்பின் ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இவ்வாறு உணவுக்காக இந்திய ஏழைகள் படும்பாடு சொல்ல முடியாதது. ஆனால் உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து சேமித்து வைத்து விநியோகிக்கும் மத்திய அரசின் இந்திய உணவுக் கழகத்தின் அலட்சியத்தால் கோடிக்கணக்கானோரின் பசியைப் போக்க வேண்டிய உணவுப் பொருட்கள் வீணாகி குப்பைக்குச் செல்லும் அவலநிலை அம்பலத்திற்கு வந்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பயனால் இந்த அவலம் அம்பலத்திற்கு வந்துள்ளது. டில்லிவாசி ஒருவர் தகவல் உரிமைச் சட்டத்தின்படி, இந்திய உணவுக் கழகத்தின் சேமிப்புக் கிடங்குகளில் வீணான உணவுப் பொருட்களின் அளவும் மதிப்பும் எவ்வளவு என்று தகவல் கேட்டிருந்தார்.
கடந்த 1997 முதல் 2007 வரையிலான 10 ஆண்டுகாலத்தில் 10 லட்சம் டன் அளவிலான கோதுமை, அரிசி, நெல், மக்காச்சோளம் போன்ற உணவுப்பொருட்கள் வீணானதாக இந்திய உணவுக் கழகம் பதில் அளித்துள்ளது.
உணவுப் பொருட்களை வீணாகாமல் பாதுகாக்க மட்டும் ரூ.242 கோடி செலவிடப்பட்டதாக கூறியிருக்கும் அந்நிறுவனம் வீணாண பொருட்களை அப்புறப்படுத்தி குப்பைகளில் சேர்க்க மட்டும் 2.59 கோடி ரூபாயை செலவழித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதில் வடமாநிலங்களான உ.பி, உத்தரகாண்ட், அரியானா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், இமாச்சல் மற்றும் டில்லி ஆகிய மாநிலங்களில் மட்டும் வீணானது 7 லட்சம் டன் என்றும் கூறப்பட்டுள்ளது.
இப்படி வீணான இந்த 10 லட்சம் டன் உணவுப் பொருட்கள் ஒரு கோடி இந்தியரின் ஓராண்டு உணவுத் தேவையை நிறைவு செய்யக்கூடிய அளவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியைப் படித்தவுடன் எனக்கு நெஞ்சு கனக்கிறது. உங்களுக்கு...

-நன்றி.ஜிம்ஷா

Tuesday, July 1, 2008

31 பதக்கங்கள் - மருத்துவ மாணவி சாதனை

சென்னை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 12 - வது பட்டமளிப்பு விழா திங்களன்று நடைபெற்றது.210 பேர் பட்டம் பெற்றனர்.77 பேருக்கு பத்க்கங்கள் வழங்கப்பட்டன.சென்னையில் இளநிலை பட்டம் படித்த லட்சுமி பிரியா , 31 பதக்கங்களை பெற்று சாதனை படைத்தார்.பதக்கங்களை ஆளுநர் பர்னாலா வழங்கினார்.பதக்கமாலைகளால் அவர் கழுத்து நிறைந்தது. சான்றிதழ்களை அடங்கிய பெட்டியை அவர் தூக்கமுடியாமல் தூக்கிச் சென்றார். அரங்கத்தில் இருந்த அனைவரும் அவரின் திறமையைப் பாராட்டி கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர்.இதே அரங்கில் , முதுநிலை பட்டம் முடித்து சாலை விபத்தில் உயிரிழந்த நாமக்கல் கல்லூரி மாணவன் குழந்தைவேலுக்கான தங்கப்பதக்கத்தை அவரின் தந்தை கைலாசம் பெற்றுக்கொண்டார். அப்போது , அரங்கமே உணர்ச்சிவசப்பட்டது

Monday, June 30, 2008

தோழர்களே...

உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே.....
- சே குவேரா
ஆயிரம் சாமிகள் அலமாரியில்
முன்னறி தெய்வங்கள்
முதியோர் இல்லங்களில்.
-பாவலர் வையவன்

வாழ்க்கை

தம்மைத் தாம் பெரிதாகவும்,தம் தகுதிக்கு மேற்பட்ட சன்மானம் வேண்டு மென்றும் எண்ணிக்கொண்டு இருப்பவர்கள் எப்போதும் கஷ்டப்பட்டே தீருவார்கள். எவ்வளவு பெரிய பதவியும் வருவாயும் வந்தாலும் ஆசையால் மனம் வாடிச் சதா அதிருப்தியில் ஆழ்ந்துதான் இருப்பார்கள். எப்போதும் கடன்காரர்களாகவும் தான் இருப்பார்கள். ஆதலால் வருவாய் போதாமல் இருப்பதற்கும் கடன்காரர்களாய் இருப்பதற்கும் காரணம் நமது பலவீனத்தின் பயனான பேராசையும் அவசியமுமே ஆகும். என்னை நான் சின்னவன் என்றும்,குறைந்த செலவில் வாழ்வதற்கு தகுதியுடையவன் என்றும் எண்ணிக்கொண்டிருக்கும் காரணத்தாலேயே நான் என் யோக்கியதைக்கு மீறின பெருமையுடையவனாகவும் தாராளமாகச் செலவு செய்பவனாகவும் கருதிக்கொண்டிருக்கிறேன். நான் மூட்டை தூக்குவதில் பாரத்தினால் கஷ்டப்பட்டிருப்பேனே யழிய மூட்டை தூக்குவது அவமானம் என்று ஒருபோதும் கஷ்டப்பட்டதில்லை. அதேபோல் மனதைகட்டுப்படுத்தச் சக்தி இருந்தால் எல்லாம் தானாகவே சரிப்பட்டு விடும்.
- தந்தைபெரியார்

Wednesday, June 25, 2008

5 பாடத்திலும் 100/100 - கல்லூரி மாணவி சாதனை.

திருப்பூரைச் சேர்ந்த சுகன்யா என்ற மாணவி B.Sc. (maths) கடைசி செமஸ்டரில் எழுதிய 5 பாடத்திலும் 100/100 வாங்கியிருக்கிறார்.
இவர் L.R.G அரசு கலைக் கல்லூரியில் படித்த இவர் இதுவரை மொத்தம் 12 பாடங்களில் 100/100 வாங்கியிருக்கிறார்.
இவரது சாதனை குறித்து பாரதியார் பல்கலைக் கழகத் துனை வேந்தர் ,“இந்த பல்கலைக் கழகத்தில் இதுவரை நிகழ்த்தப் படாத சாதனை இது. இதற்காக மாணவி சுகன்யாவையும் அவரது கல்லூரி ஆசிரியர்களியும் பாராட்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.
சுகன்யா பற்றிய முக்கிய விபரங்கள்
- தந்தை சிறு பாத்திர வியபாரி- தயார் பனியன் கம்பெனியில் வேலை- +2 படித்தது தமிழ் வழிக் கல்வியில்- தனியாக டியூசன் எதுவும் படிக்கவில்லை.
தற்பொழுது வேலையில் சேர்ந்து விட்ட சுகன்யா, சிறிது இடைவெளி விட்டு படிப்பைத் தொடர உள்ளார்.
தமிழ் வழிக் கல்வி பயின்று ஆங்கிலம் மூலம் கல்ல்லுரிப் படிப்பைத் தொடர்ந்த்தது கடினமாக் இருந்ததா என்ற கேள்விக்கு சுகன்யாவின் பதில் கீழே.
புது பயிற்று மொழியில்தான் படித்தாக வேண்டும் என்ற உண்மையை ஏற்றுக் கொண்டு, முழு ஈடுபாட்டுடன், நமது முழுத்திறமையை வெளிப்படுத்தினால் வெற்றி பெறுவதை யாரலும் தடுக்க முடியாதது.
வலையுலக அன்பர்கள், பின்னுட்டமிடுவதை விட ஒரு சிறு பாராட்டுக் கடிதம் தங்கள் கைப்பட எழுதி, R.சுகன்யா, L.R.G அரசு கலைக் கல்லூரி, பல்லடம் ரோடு, திருப்பூர், என்ற முகவரிக்கு அனுப்பினால், மிகவும் மகிழ்வேன்.
கடிதம் அனுப்பியதை, பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்துங்கள்
வகை: 100/100, L R G Govt Arts, சாதனை, தமிழ் வழிக் கல்வி

இமயமலையைக் கெடுக்கிறார்கள்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மலைப் பகுதியில் அமர்நாத் குகையில் பனி லிங்கம் என்பார்கள். இதைப் பார்க்கப் பெருங்கூட்டமாக இந்துக்கள் போகிறார்கள். இதற்கான ஏற்பாட்டை மதச்சார்பற்ற இந்திய அரசு செய்து தருகிறது. இதற்கு வரும் இந்துக்களைக் கவனித்து அனுப்புவதற்காகத் தனியே ஒரு வாரியம் உள்ளது. சிறீ அமர்நாத் கோயில் வாரியம் எனப் பெயர். இதன் தலைவர் மாநில ஆளுநர், இப்போதிருப்பவர் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர்.இந்தப் பனி லிங்கம் என்பதே ஒரு புருடா. சுண்ணாம்புக் கற்களில், குகைகளில், குளிர் காலத்தில் வடியும் நீர் பட்டு இப்படிப்பட்ட பலவகை உருவங்கள் உருவாகும். குகைகளின் மேலிருந்து கீழாகவும், தரையில் இருந்து மேல் நோக்கியும் உருவாகும். மேலிருந்து கீழாகக் கூர்முனை உள்ளவை Stalactite என்றும் கீழிருந்து மேலாக வளர்பவை என்றும் கூறப்படுகின்றன. Iciclelike deposit mounting upwards from the floor of a cave as water containing lime dripping from above என்பதுதான் லிங்கம் எனப்படுகிறது. அமர்நாத்தில் அறிவியல் அறிவு இல்லாத இந்துக்களை இதைக்காட்டி ஏமாற்றி வயிற்றைக் கழுவுகிறது ஓர் அயோக்கியக் கும்பல். அதற்குத் துணை போனவர் இந்த மாநில ஆளுநர். இது இமயமலையில் மட்டும் இல்லை. நியூசிலாந்தில் இருக்கிறது, கிரீஸில் இருக்கிறது. பல நாடுகளில் உள்ளது.போன ஆண்டு லிங்கம் வளரவில்லை. என்ன செய்தார் தெரியுமா அந்த ஆர்.எஸ்.எஸ். ஆளுநர்? குச்சி அய்ஸ் தயாரிப்பதைப் போல, அய்ஸ் கட்டிகளை அப்பி லிங்கத்தை மொத்தமாக்கினார். அதுவும் கூட கரைந்து போய், உள்ளே இந்த எத்தர்கள் உருவாக்கி வைத்த சிமென்ட் கட்டை வெளியே தெரிந்துவிட்டது. ஆக, சிமென்டில் கட்டப்பட்ட உருளைக் கட்டையின் மீது சுண்ணாம்பு நீர் கொட்டி, ஸ்டாலக்மைட் உருவாவதை இவர்கள் பனிலிங்கம் எனப் புளுகி மடமையை வளர்க்கின்றனர்.போன ஆண்டின் அனுபவத்தை வைத்து இந்த ஆண்டு லிங்கத்தின் உயரத்திற்கும் மேலே இரும்புக் கம்பிக் கூண்டு அமைத்து வைத்துள்ளனர். பக்த கே()டிகள் தொட்டுத் தொட்டு, பனி கரைந்து போய்விட்டது சென்ற ஆண்டு! ஆகவே தடுப்பு வேலி! அய்யப்பன் மகரவிளக்கு மோசடியை கேரள அரசு ஒத்துக்கொண்டது போல, என்றைக்கு இதைக் காசுமிர் அரசு ஒத்துக் கொள்ளப் போகிறதோ? அந்த நாள் விரைந்து வரட்டும்.ஆளுநர் மாற்றப்பட்டு விட்டார் புதிய ஆளுநரும் நியமிக்கப்பட்டுவிட்டார். பழைய ஆள் இடத்தைக் காலி செய்யாமல் அழிச்சாட்டியம் செய்கிறார். மய்ய அரசும் மவுனமாக இருக்கிறது. என்னமோ நடக்குது! ஒண்ணுமே புரியலை!இந்நிலையில் மாநில முதலமைச்சர் குலாம் நபி ஆசாத், பனிலிங்க வாரியத்திற்கு 100 ஏக்கர் நிலம் கொடுத்திருக்கிறார். அது தனியார் நிலமா? இல்லை, அரசு நிலமா? இல்லை. அது காட்டிலாகா நிலம்! அதைக் கொடுப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா? கிடையாது. பின் எப்படிக் கொடுத்தார்?இந்திய வனச் சட்டத்தின்படி ஒரு ஏக்கர் வனத்துறை இடத்தை எதற்காவது அரசே எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டாலும் இருமடங்கு நிலம் (அதாவது இரண்டு ஏக்கர்) தந்தால்தான் தொடமுடியும். அந்தச் சட்டப்படி, 100 ஏக்கர் நிலத்தைப் பனிலிங்க வாரியத்திற்கு மாநில அரசு தந்தது என்றால், 200 ஏக்கர் அரசு நிலம் வனத்துறைக்குத் தந்திருக்க வேண்டும், தந்தார்களா?காட்டிலாகா நிலங்களையாருக்கும் தரக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவே போட்டிருக்கிறது. மீறி கொடுத்துள்ளனர்.ராஜா தவறு செய்யமாட்டார்.‘King can do no wrong’ என்று ஒரு சொலவடை இங்கிலாந்தில் இருந்தது. தவறு செய்த ராஜாவைக் கொன்ற நிகழ்ச்சியும் அங்கேயே நடந்தது. ஜனநாயகத்தில் அரசு தவறு செய்தால் அய்ந்தாம் ஆண்டு வரும் வரை காத்திருக்க வேண்டும்.சென்ற ஆண்டு லிங்கம் வளராமல் போனதற்கான காரணம், பக்தர்கள் கொட்டிய குப்பையும், கொளுத்திய விறகும் சுற்றுச்சூழலைப் பாழ்படுத்தியதால்தான் என்று அறிவியல் கூறியது. இந்நிலையில் அங்கு 100 ஏக்கரில் வீடுகளும் கட்டப்பட்டு, இந்துக்கள் குடியும் குடித்தனமுமாக இருந்தால் - சுற்றுச்சூழல் என்னாவது? குலாம் நபி ஆஜாத்துக்குக் கவலையில்லை. யாரையோ திருப்திப்படுத்த இமயமலையையே கெடுக்கிறார்.மக்கள் எதிர்க்கிறார்கள், ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள், போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். மாநில அரசு கண்ணீர்ப்புகை வெடித்துத் தடியடி நடத்துகிறது. போராட்டத்திற்கு மதச் சாயம் பூசி, பா.ஜ. கட்சி எதிர்ப் போராட்டம் என்கிறது.மொத்தத்தில் இமயமலை கெடுக்கப்பட்டுவிட்டது.

அறிவாளிகளுக்கு இறை நம்பிக்கை குறைவு

சாதாரண மக்களுடன் ஒப்பிடுகையில் அறிவாளிகளுக்கு இறை நம்பிக்கை குறைவாக உள்ளதாக, லண்டன் அல்ஏடெர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் தாங்கள் நடத்திய ஆய்வின் மூலம் இது தெரிய வந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதிலும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் அறிஞர்களுக்கு இறை நம்பிக்கை மிக மிகக் குறைவு. தாங்கள் புத்திக் கூர்மையோடு திகழ்வதற்கு தங்களது திறனே காரணம். இதற்கு வேறு காரணம் எதுவும் இல்லை என்றே பெரும்பாலான பிரிட்டன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றனர்.பிரிட்டினில் ஆரம்பக் கல்வி பயில்பவர்கள் மத்தியில் இறை நம்பிக்கை அதிகம் உள்ளது. அவர்கள் வளர்ந்து அறிவு முதிர்ச்சிப் பெறப்பெற அவர்கள் மத்தியில் இறை நம்பிக்கை மெதுவாக குறைய ஆரம்பித்து விடுகிறது. அந்த வகையில் 20-ம் நூற்றாண்டில் 137 வளரும் நாடுகளில் மக்கள் மத்தியில் சமய நம்பிக்கை குறைந்து வருகிறது. மக்கள் அறிவாளிகளாக மாறி வருவதே இதற்குக் காரணம்.பிரிட்டனில் 3.3 சதவீதம் பேர்தான் இறை நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தனர். 68.5 சதவீதம் பேர் தங்கள் மீதான நம்பிக்கை தவிர்த்து வேறெந்த நம்பிக்கையும் இல்லை என தெரிவித்ததாக இந்த ஆராய்ச்சிக் குழுவில் இடம் பெற்ற பேராசிரியர் ரிச்சர்டு லைன் தெரிவித்தார்.நன்றி :

‘தினமணி’ 13.6.2008

Thursday, June 12, 2008

கடவுள் இல்லாத சர்ச்சுகள் வேண்டும்

‘மதம், கடவுள்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை’ என்ற இந்த நம்பிக்கைதான், அமெரிக்காவில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது. இது பற்றி ‘ஜீண்மெக்னேகு’ எனும் நியூயார்க் பத்திரிகை கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மத நம்பிக்கை தொடர்பாக நிறுவனம் ஒன்று கணக்கெடுப்பு நடத்தியது. அதில் 16 சதவீத அமெரிக்கர்கள், தங்களுக்கு மதத்தில் நம்பிக்கை கிடையாது என்று கூறியுள்ளனர். 18-லிருந்து 29 வயதுள்ள இளைஞர்களில் 25 சதவீதம் பேர் தங்களை மத மற்றவர்கள் என்றும், எந்த மதத்திலும் நம்பிக்கை கிடையாது என்றும் கூறியுள்ளனர். 1986 ஆம் ஆண்டு இதே போல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் மத நம்பிக்கை இல்லை என்று 11 சதவீதம் பேர் மட்டுமே கூறியிருந்தனர். அமெரிக்காவில் நாத்திகர் குழுக்கள் - அரசும், சர்ச்சும், பிரிந்தே நிற்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வருகின்றன. கடந்த 13 ஆண்டுகளாக அமெரிக்க நாத்திக கழகத்தின் தலைவராக உள்ள எல்லன் ஜான்சன் கூறுகையில், “நாங்கள் சுதந்திரமானவர்கள்; எந்த அமைப்பிலும் நாங்கள் இணைத்துக் கொள்ள மாட்டோம்; அப்படி அமைப்பு தேவைப்பட்டால் நாங்களே உருவாக்கிக் கொள்வோம்” என்று கூறுகிறார். கடவுள் எதிர்ப்பு என்பதோடு மட்டும் நின்று விடாமல், டார்வின் பரிணாமக் கொள்கை மற்றும் பொது நெறிகளை மக்களிடையே பரப்ப வேண்டும் என்று அமெரிக்க நாத்திகர்கள் கருதுகிறார்கள்.
மதங்கள் இப்போதும் ஏன் உயிரோடு இருக்கின்றன? இந்தக் கேள்விக்கு அமெரிக்க நாத்திக சிந்தனையாளர்கள் கூறும் பதில் இது தான். அவர்களுக்கு நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், உடைமைகள், வாரிசுகள், சடங்குகள், பணம், மதப் பிரச்சாரகர்கள் மற்றும் இறப்புக்குப் பிறகு இருப்பதாகக் காட்டப்படும் உலகம் - இவைகள்தான் மதங்களை வாழ வைத்துக் கொண்டுள்ளன. இதனால் சர்ச்சுகள் - தேவைகளைப் பூர்த்தி செய்யும் மய்யங்களாக செயல்படுகின்றன. அதேபோல் நாத்திகர்களுக்கும் கலாச்சார மய்யங்கள் வேண்டும் என்கிறார், ஹார்டுவேர்டு பல்கலைக்கழக பேராசிரியரும் நாத்திகருமான கிரேக் எப்குடின். ‘விஞ்ஞானமும் பகுத்தறிவும் அவசியத் தேவை; ஆனால் இந்த சிந்தனைகள், மருத்துவமனைக்கு போய் ஆறுதல் சொல்ல உடன் வராது. எனவே மதமற்ற மனித சேவைகளுக்கான கலாச்சார மய்யங்கள் நாத்திகர்களுக்கு வேண்டும்’ என்று அவர் கூறுகிறார். பல நாத்திகர்கள் - “சர்ச் கட்டிடங்கள் நாத்திகர்களுக்கு தேவை. ஆனால், அதில் கடவுள் மட்டும் இருக்கக் கூடாது” என்று கூறுகிறார்கள். - இவ்வாறு அந்த அமெரிக்க பத்திரிகை கட்டுரை வெளியிட்டுள்ளது