Wednesday, June 25, 2008

5 பாடத்திலும் 100/100 - கல்லூரி மாணவி சாதனை.

திருப்பூரைச் சேர்ந்த சுகன்யா என்ற மாணவி B.Sc. (maths) கடைசி செமஸ்டரில் எழுதிய 5 பாடத்திலும் 100/100 வாங்கியிருக்கிறார்.
இவர் L.R.G அரசு கலைக் கல்லூரியில் படித்த இவர் இதுவரை மொத்தம் 12 பாடங்களில் 100/100 வாங்கியிருக்கிறார்.
இவரது சாதனை குறித்து பாரதியார் பல்கலைக் கழகத் துனை வேந்தர் ,“இந்த பல்கலைக் கழகத்தில் இதுவரை நிகழ்த்தப் படாத சாதனை இது. இதற்காக மாணவி சுகன்யாவையும் அவரது கல்லூரி ஆசிரியர்களியும் பாராட்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.
சுகன்யா பற்றிய முக்கிய விபரங்கள்
- தந்தை சிறு பாத்திர வியபாரி- தயார் பனியன் கம்பெனியில் வேலை- +2 படித்தது தமிழ் வழிக் கல்வியில்- தனியாக டியூசன் எதுவும் படிக்கவில்லை.
தற்பொழுது வேலையில் சேர்ந்து விட்ட சுகன்யா, சிறிது இடைவெளி விட்டு படிப்பைத் தொடர உள்ளார்.
தமிழ் வழிக் கல்வி பயின்று ஆங்கிலம் மூலம் கல்ல்லுரிப் படிப்பைத் தொடர்ந்த்தது கடினமாக் இருந்ததா என்ற கேள்விக்கு சுகன்யாவின் பதில் கீழே.
புது பயிற்று மொழியில்தான் படித்தாக வேண்டும் என்ற உண்மையை ஏற்றுக் கொண்டு, முழு ஈடுபாட்டுடன், நமது முழுத்திறமையை வெளிப்படுத்தினால் வெற்றி பெறுவதை யாரலும் தடுக்க முடியாதது.
வலையுலக அன்பர்கள், பின்னுட்டமிடுவதை விட ஒரு சிறு பாராட்டுக் கடிதம் தங்கள் கைப்பட எழுதி, R.சுகன்யா, L.R.G அரசு கலைக் கல்லூரி, பல்லடம் ரோடு, திருப்பூர், என்ற முகவரிக்கு அனுப்பினால், மிகவும் மகிழ்வேன்.
கடிதம் அனுப்பியதை, பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்துங்கள்
வகை: 100/100, L R G Govt Arts, சாதனை, தமிழ் வழிக் கல்வி

No comments: